திருவேங்கடத்தில் மது ஒழிப்பு குறித்து கலை நிகழ்ச்சி

திருவேங்கடத்தில் மது ஒழிப்பு குறித்து கலை நிகழ்ச்சி
திருவேங்கடத்தில் மது ஒழிப்பு குறித்து கலை நிகழ்ச்சி நடைபெற்றது
தென்காசி மாவட்டம், திருவேங்கடத்தில் கலைவாணர் கலைக்குழு சார்பில் மது ஒழிப்பு விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி நடைப்பெற்றது.

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே திருவேங்கடம் காந்தி மண்டபம் முன்பு மது ஒழிப்பு குறித்து கலைவாணர் கலைக்குழு சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியை முன்னிட்டு கலைவாணர் கலைக்குழு ஒருங்கிணைப்பாளர் ஆனந்தராஜ் குழுவினர் தப்பாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம் ஆகிய நிகழ்ச்சிகளை நடத்தினர்.

இந்த நிகழ்ச்சியில் திருவேங்கடம் வருவாய் ஆய்வாளர் சுப்புராஜ், திருவேங்கடம் கிராம அலுவலர் செல்ல முருகன், வெள்ளாகுளம் கிராம நிர்வாக அலுவலர் செந்தில்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story