கலைஞர் நூற்றாண்டு விழா- கலைச் சங்கமம் நிகழ்ச்சி

கலைஞர் நூற்றாண்டு விழா- கலைச் சங்கமம் நிகழ்ச்சி நடைபெற்றது.
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட காந்திகிராமம் பூங்காவில், நேற்று இரவு கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, கலைச்சங்கமும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கரூர் எம்பி ஜோதிமணி உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசுத்துறை அதிகாரிகள், கலைஞர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு இயல், இசை, நாடகம் மற்றும் பொங்கல் திருநாளை கொண்டாடும் வகையில் நமது பாரம்பரிய கிராமியக் கலைகளை ஊக்குவிப்பதற்காக இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் காவடியாட்டம், ஒயிலாட்டம், தப்பாட்டம், கரகாட்டம், கோலாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நிகழ்ச்சியின் நிறைவில், கலை நிகழ்ச்சியில் பங்கேற்ற கலைஞர்களுக்கு நினைவு பரிசு வழங்கி, பாராட்டு தெரிவித்தார் மாவட்ட ஆட்சியர் தங்கவேல்.

Tags

Read MoreRead Less
Next Story