ஆத்தூர்: தீயணைப்போர் தியாகிகள் நினைவு தினம்

ஆத்தூரில் தீயணைப்பு நிலையத்தில் தீயணைப்போர் தியாகிகள் நினைவு தினம் அனுசரிப்பு.
ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 14ஆம் தேதி நாடு முழுவதும் தீயணைப்போர் தியாகிகள் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அன்றைய தினம் தீ விபத்து மற்றும் மீட்பு பணிகளில் தைரியமாக செயல்பட்டு வீரமரணம் அடைந்த தீயணைப்பு வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு வரும் நிலையில் சேலம் மாவட்டம் ஆத்தூர் தீயணைப்பு நிலைய அலுவலகத்தில் தீயணைப்புத்துறை மற்றும் மீட்பு பணிகள் துறையின் பணியின்போது உயிர் நீத்தவர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தீயணைப்பு நிலைய அலுவலர் அசோகன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் அங்கு அமைக்கப்பட்ட கல்வெட்டுக்கு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மலர் வளையம் வைத்து மலர் தூவி வீரவணக்கம் செலுத்தப்பட்டது. மேலும் தீயணைப்பு வீரர்கள் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கான வீரவணக்கம் செலுத்தி உறுதிமொழி ஏற்கப்பட்டது.

Tags

Read MoreRead Less
Next Story