புத்துமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா- பக்தர்கள் நேர்த்திக்கடன்

ஆத்தூர் அருகே மஞ்சனி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ புத்துமாரியம்மன் திருக்கோவில் 18ஆம் ஆண்டு சித்திரை திருவிழாவில் 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர்
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே மஞ்சினி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ புத்துமாரியம்மன் திருக்கோவிலில் 18ஆம் ஆண்டு சித்திரை தீமிதி திருவிழா நிகழ்ச்சி கடந்த 16ஆம் தேதி கணபதி ஹோமம் அம்மன் பூச்சாட்டுகள் காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கி அம்மனுக்கு பொங்கல் வைத்து சிறப்பு அலங்காரங்கள் சிறப்பு பூஜைகள் செய்து வந்த நிலையில், இன்று நூற்றுக்கும் மேற்பட்டோர் விமான அலகு கம்பி அலகு,கத்தி அலகு, தேர் அலகு, கார் அலகு குத்தியும் முக்கிய வீதிகள் வழியாக வந்து மேளதாளங்கள் வானவேடிக்கை முழங்க அம்மனுக்கு தங்களது நேர்த்தி கடன் செலுத்தினர்,

Tags

Read MoreRead Less
Next Story