ஆத்தூர்: பெண்களை கேலி கிண்டல் செய்த போதை இளைஞர்கள் மூன்று பேர் கைது

ஆத்தூர்: பெண்களை கேலி கிண்டல் செய்த போதை இளைஞர்கள் மூன்று பேர் கைது

காவல்துறை விசாரணை


ஆத்தூர் அருகே நரசிங்கபுரம் மாரியம்மன் கோவில் பகுதியில் பெண்களை கேலி கிண்டல் செய்த வழக்கில் போதை இளைஞர்கள் மூன்று இளைஞர்கள் கைது,
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே நரசிங்கபுரம், மாரியம்மன் கோவில், சிவன் கோவில் தெருவில் சுமார் ஆயிரத்திற்கு மேற்பட்டோர் வசித்து வருகின்றனர் கோவில் அருகே வசிஷ்ட நதிக்கரையில் பெண்கள் பொது கழிப்பிடம் உள்ளது இப்பகுதி மக்கள் அவ்வழியாக செல்வது வழக்கம் நரசிங்கபுரம் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் கஞ்சா,மது போதையில் ஐந்துக்கு மேற்பட்ட இளைஞர்கள் பெண்களை தகாத வார்த்தைகளால் பேசி கேலி கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது. இதை தட்டி கேட்ட நிலையில் கஞ்சா போதை இளைஞர்கள் சிலரை மிரட்டல் விடுத்து அடித்ததாக கூறப்படுகிறது. இருதரப்பினரிடையே கடந்த 25 ம்தேதி இரவு தகராறு ஏற்பட்டு கலவரமாக மாறியது இந்த கலவரம் குறித்து ரமேஷ் மற்றும் 100 க்கும் மேற்பட்ட பெண்கள் ஆண்கள் ஆத்தூர் நகர காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு கோவிந்தன் மகன் சபரிநாத்( 25), விஜயகுமார் மகன் ஸ்ரீராம், சக்திவேல் மகன் சந்தோஷ் குமார் ஆகிய மூன்று பேர் இந்த பிரச்சனை ஏற்படுத்தியதாக அவர்கள் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை.

Tags

Read MoreRead Less
Next Story