விபத்தில் காயமடைந்த இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

ஆத்தூர் அரசு மருத்துவமனையில் தலைவாசல் பகுதியில் நடைபெற்ற விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த 4 பேரில் 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் .
சேலம் மாவட்டம், தலைவாசலில் கள்ளக்குறிச்சியில் இருந்து சேலம் நோக்கி சென்ற சரக்கு ஆட்டோ திடீரென முன்பக்க டயர் வெடித்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து பேருந்துக்காக காத்திருந்த பயணிகள் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் பேருந்துக்காக காத்திருந்த நாவகுறிச்சி கிராமத்தைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மணிகண்டன் (32), நத்தகரைமேடு பகுதியைச் சேர்ந்த ராமசாமி மகன் மணி (65)மேலும் ஆட்டோ ஓட்டுநர் மணி விழுந்தான் கிராமத்தைச் சேர்ந்த அருள் குமார் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்களை மீட்டு ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி மணி மற்றும் டாட்டா ஏசி ஓட்டுநர் அருள்குமார் ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் படுகாயம் அடைந்த மணிகண்டனை மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story