பேருந்தில் ஜாதி பாடல்களை ஒலிக்க சொல்லி இளைஞர்கள் அட்டூழியம்

பேருந்தில் ஜாதி பாடல்களை ஒலிக்க சொல்லி இளைஞர்கள் அட்டூழியம்

கண்ணாடி உடைக்கப்பட்ட பேருந்து 

கொண்டாநகரம் பேருந்து நிறுத்தத்தில் தனியார் பேருந்தில் ஜாதி பாடல்களை ஒலிக்க சொல்லி தகராறில் ஈடுபட்டு பேருந்து கண்ணாடியை உடைத்த இளைஞர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
திருநெல்வேலி மாநகர கொண்டாநகரம் பேருந்து நிறுத்தத்தில் நேற்று (ஏப்‌.27) இரவு தனியார் பேருந்தில் சில இளைஞர்கள் தங்களது ஜாதி பாடல்களை பேருந்தில் போடுமாறு தகராறு செய்துள்ளனர். இதற்கு டிரைவர் மறுத்ததால் ஆத்திரத்தில் பேருந்து கண்ணாடியை உடைத்து விட்டு தப்பி ஓடி உள்ளனர். இது குறித்த புகாரின் அடிப்படையில் சுத்தமல்லி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story