மனநலம் பாதித்தவரை தாக்கியவர் கைது

மனநலம் பாதித்தவரை தாக்கியவர் கைது

மனநலம் பாதிக்கப்பட்டவரை தாக்கியவர் கைது

கடலூர் மாவட்டம்,ஆவினங்குடி பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்டவரை தாக்கியவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

கடலூர் மாவட்டம், திட்டக்குடி அடுத்த ஆவினங்குடி அடுத்த கூடலூர் குடிக்காடு கிராமத்தை சேர்ந்த இளைய ராஜா சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது. சம்பவத்தன்று இவர் அதே பகுதியை சேர்ந்த வெங்கடேசன் என்பவரின் வீட்டின் கதவு மற்றும் காரின் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தியதாக தெரிகிறது.

இதை பார்த்து ஆத்திரமடைந்த வெங்டேசனின் உறவினரான அதே பகுதியை சேர்ந்த சீனிவாசன் என்பவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று கூடபாராமல், இளையராஜாவை கட்டி வைத்து தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து இளையராஜா அண்ணன் தமிழரசன் ஆவினங்குடி காவல் நிலையத்தில் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சுபிக்ஷா வழக்குப்பதிந்து சீனிவாசனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story