சேலம் நெத்திமேட்டில் ஆட்டோ டிரைவர் தற்கொலை !

சேலம் நெத்திமேட்டில் ஆட்டோ டிரைவர் தற்கொலை !

தற்கொலை

குடும்ப பிரச்சினை காரணமாக ஆட்டோ டிரைவர் தற்கொலை செய்துகொண்டார்.
சேலம் நெத்திமேடு எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 50). ஆட்டோ டிரைவர். இவருக்கும், குடும்பத்தினருக்கும் இடையே பிரச்சினைஇருந்து வந்ததாக கூறப்படுகிறது. பாலமுருகன் நேற்று முன்தினம் வெளியே சென்று விட்டு வீடு திரும்பினார். அப்போது அவருக்கும், குடும்பத்தினருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் தனது அறைக்கு சென்ற பாலமுருகன் தூக்குப்போட்டு கொண்டார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாகடர்கள் பரிசோதித்தபோது பாலமுருகன் ஏற்கனவே இறந்து விட்டது தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில் அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story