சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு

சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு

  விக்கிரவாண்டியில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

விக்கிரவாண்டியில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் தேசிய சாலை பாதுகாப்பு மாதநிறைவு விழாவையொட்டி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

மாவட்டகாவல்துறை, வட்டார போக்குவரத்து துறை மற்றும் உளுந்துார்பேட்டை எக்ஸ்பிரஸ் வேஸ் பிலிட் சார்பில் நடந்த இந்த விழாவுக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பாண்டியன் தலைமை தாங்கினார். திட்ட மேலாளர் சதீஷ்குமார், போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் துரைராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை மேலாளர் சொர்ணமணி வரவேற்றார். இதில் பரதாலயா கலைக்குழுவினர் சத்யன் தலைமையில் கலைநிகழ்ச்சி மூலம் சாலை பாதுகாப்பு விதிமுறைகளை அனைவரும் பின்பற்ற வேண்டியதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தொடர்ந்து வாகன ஓட்டிகளுக்கு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. மேலும் ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனங்களில் வந்தவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. இதில் திட்ட பொறுப்பாளர் சண்முகம், பாதுகாப்பு அதிகாரி துரை நாராயணன்,வாகனஓட்டிகள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பி.ஆர்.ஓ.தண்டபாணி நன்றி கூறினார்.

Tags

Read MoreRead Less
Next Story