ஹஜ்ஜுப்பெருநாள் தொழுகை

ஹஜ்ஜுப்பெருநாள் தொழுகை
 தென்காசி மாவட்டத்தில் ஹஜ்ஜுப்பெருநாள் தொழுகை நடைபெற்றது.
தென்காசி மாவட்டத்தில் ஹஜ்ஜுப்பெருநாள் தொழுகை நடைபெற்றது.

தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் இன்று தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் 9இடங்களில் ஹஜ்பெருநாள் தொழுகை திடல்களில் நடத்தப்பட்டது. இதில் காயிதே மில்லத் திடல் முழுவதும் இஸ்லாமியர்கள் நிறைந்திருந்தனர். பெரியதெரு, புதுத்தெரு , மணிக்கூண்டு ஆகிய இடங்களிலும் தொழுதனர். இதில் அதிகாலை 6 மணி முதலே இஸ்லாமியர்கள் ஆண்களும், பெண்களும் மற்றும் சிறுவர், சிறுமியர்களும் குளித்து விட்டு நறுமணம் பூசி தொழுகைக்காக காயிதே மில்லத் திடல் நோக்கி வரத் தொடங்கினர். 6. 30 மணியளவில் மாநில பேச்சாளர் அப்துர் ரஹ்மான் ஃபிர்தவ்ஸி , தலைமை ஏற்று பெருநாள் சிறப்பு தொழுகையை நடத்தினார்.

பேட்டை கிளை சார்பில் மர்க்கஸுந் நூர் தவ்ஹீத் திடலில் ஜலாலுதீன், ரஹ்மானியாபுரம் மர்யம் பள்ளி திடலில் அப்துல்நாசர் , உட்பட பலர் தலைமையில் தொழுகை நடை பெற்றது . அதேப்போல் பொட்டல்புதூர், முதலியார்பட்டி, செங்கோட்டை, அச்சன்புதூர் , வடகரை, வீரணம் , சங்கரன்கோவில் , புளியன்குடி , வாசுதேவநல்லூர், திரிகூடபுரம் உட்பட பல்வேறு பகுதிகளில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை நடைபெற்றது.

Tags

Next Story