பட்டஞ்சேரி கோவிலில் பால்குடம் ஊர்வலம்

பட்டஞ்சேரி கோவிலில் பால்குடம் ஊர்வலம்

பால்குடம் ஊர்வலம்

அகோர காளி அங்காள பரமேஸ்வரி அம்மன் திருக்கோவிலில் பால்குட திருவிழா
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த பட்டஞ்சேரி கிராமத்தில் அகோர காளி அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், நடப்பாண்டிற்கான மாசி மாத விழா, கடந்த 16ம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. அதைத் தொடர்ந்து நேற்று அப்பகுதியைச் சேர்ந்த பெண் பக்தர்கள், அங்குள்ள கங்கை அம்மன் கோவில் அருகே வந்து பால் குடங்களை தலையில் சுமந்தபடி ஊர்வலமாக அகோர காளி அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலை சென்றடைந்தனர். அங்கு அம்மனுக்கு பெண் பக்தர்கள் தங்கள் கைகளாலேயே பாலாபிஷேகம் செய்தனர். பின் அம்மனுக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேக ஆராதனை நடைபெற்றது. அதைத் தொடர்ந்து விரதம் இருந்த பக்தர்கள் தீச்சட்டி எடுத்தும், அலகு குத்தியும் அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.

Tags

Read MoreRead Less
Next Story