நாசரேத்தில் புதிதாக அங்கன்வாடி மையம் கட்ட பூமி பூஜை!

நாசரேத்தில்  புதிதாக அங்கன்வாடி மையம் கட்ட பூமி பூஜை!

 பூமி பூஜை

நாசரேத்தில் ரூ.26 லட் சம் மதிப்பில் புதிதாக அங்கன்வாடி மையம்  கட்டுவதற்கு பூமி பூஜை  நடந்தது.
தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் பேரூராட்சி 12 வது வார்டு திருவள்ளுவர் காலனியில் நமக்கு நாமே திட்டம் மூலமாக ரூ.26 லட்சம் மதிப்பில் புதிதாக அங்கன்வாடி மையம் கட்டுவதற்கு ஊர் மக்கள் நிதி, டி.வி.எஸ். சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை நிதி மற்றும் அரசின் நிதி மூலமாக பணம் ஒதுக்கீடு செய்யப்பட்டு அங்கன்வாடி மையம் கட்டுவதற்கு பூமிபூஜைக்கு பேரூராட்சி தலைவி நிர்மலா ரவி தலைமை வகித்து பணிகளை துவக்கி வைத்தார். துணை தலைவர் அருண் சாமுவேல், பேரூராட்சி செயல் அலுவலர் மகேஸ் வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்வில் திமுக நகர செயலாளர் ஜமீன் சாலமோன், முன்னாள் பேரூராட்சி தலைவர் ரவி செல்வகுமார், இளநிலை பொறியாளர் விஜயகுமார், உதவியாளர் பிரகாஷ் மற்றும் ஊர் பொதுமக்கள், பேரூராட்சி கவுன்சிலர்கள் அதிசயமணி, ஐஜினஸ்குமார்,ரவிந்திரன், பத்திரகாளி,ரதிசந்திரன், சாமுவேல், ஸ்டெல்லா அப்பாதுரை, பெனிட்ரோ, ஜெயா, அனி சாலமோன்,ஆகியோர் கலந்து கொண்டனர். பேரூராட்சி 12வது வார்டு கவுன்சிலர் ரவீந்திரன் நன்றி கூறினார்.

Tags

Read MoreRead Less
Next Story