ஆய்க்குடி அரசு பள்ளியில் புதிய ஆய்வகம் கட்ட பூமி பூஜை

ஆய்க்குடி அரசு பள்ளியில் புதிய ஆய்வகம் கட்ட பூமி பூஜை
ஆய்க்குடி அரசு பள்ளியில் புதிய ஆய்வகம் கட்ட பூமி பூஜை
தென்காசி மாவட்டம், ஆய்க்குடி அரசுப்பள்ளியில் பள்ளியில் புதிய ஆய்வகம் கட்ட பூமி பூஜை நடைபெற்றது.

தென்காசி மாவட்டம், ஆய்க்குடி தேர்வுநிலை பேரூராட்சியில் பள்ளி மேம்பாட்டு மானியம் 2023-2024-இன் கீழ் ஆய்க்குடி அரசு மேல் நிலைப்பள்ளியில் ஆய்வக கட்டிடம் மற்றும் கழிப்பிடம் அமைத்தல் பணிகள் ரூ. 66. 70 இலட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ள நேற்று பூமிபூஜை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு ஆய்க்குடி பேரூராட்சி மன்ற தலைவர் சுந்தர்ராஜன் தலைமை தாங்கினார், பேரூராட்சி செயல் அலுவலர் சாந்தி, துணைத் தலைவர் மாரியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் ஆய்க்குடி பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் இலக்கியா, கார்த்திக், உலகம்மாள், பசுமதி, முத்துமாரி, நமச்சிவாயம், விமலா ராணி, சிந்துமொழி, வெங்கடேஷ், அருள் வளர்மதி, ஷோபா, பேச்சிமுத்து, ஒப்பந்தகாரர் மாயா கற்பக இந்துமதி, ஆய்க்குடி அரசு மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் சுப்பையா பாண்டியன், ஆசிரியர் பெருமக்கள், பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் ஐய்யப்பன், பேரூராட்சி பணியாளர்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story