ஆலங்குளம் அருகே மான் மீது பைக் மோதி விபத்து: இளைஞர் உயிரிழப்பு

ஆலங்குளம் அருகே மான் மீது பைக் மோதி விபத்து: இளைஞர் உயிரிழப்பு

கோப்பு படம் 

ஆலங்குளம் அருகே மான் மீது பைக் மோதி விபத்தில் இளைஞர் உயிரிழந்தார்.

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள மாறாந்தை அம்பலவாசகர் தெருவைச் சேர்ந்தவர் இசக்கி ராஜா (எ) அரவிந்த் (22). இவரும் இவரது நண்பர்களும் நேற்று இரவு பைக்கில் ஆலங்குளம் வந்து ஊருக்கு சென்று கொண்டிருந்தனர்.

அப்போது தனியார் செவிலியர் கல்லூரி அருகே வந்த போது குறுக்கே வந்த மான் மீது பைக் மோதியதில் இசக்கி ராஜா சம்பவயிடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார். இதைக் கண்ட அப்பகுதி பொதுமக்கள் ஆலங்குளம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர் விருந்து சென்ற போலீசார் உடலை கைப்பற்றி பிரத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தகது.

Tags

Next Story