சேலம் சூரமங்கலத்தில் பைக் திருட்டு

சேலம் சூரமங்கலத்தில் பைக் திருட்டு

பைக் திருட்டு - கைது 

ஏழு மாதங்களுக்கு பிறகு திருட்டில் ஈடுபட்ட இரண்டு பேர் கைது
சேலம், சூரமங்கலத்தில் பைக் திருட்டில் கோவை, ஈடுபட்ட ஈரோட்டை சேர்ந்த திருடர்களை போலீசார் கைது செய்தனர். சேலம், சூரமங்கலத்தை சேர்ந்தவர் ராஜவேல் மனைவி தெய்வானை,(43). இவர் தனது ஜூபிடர் பைக்கை கடந்த, 2023 ஜூலை, 29ல் தன் வீட்டின் முன் நிறுத்தினார். மறுநாள் காலை பார்த்த போது பைக்கை காணவில்லை. இது குறித்து சூரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஏழு மாதங்களுக்கு பின் நேற்று முன்தினம் பைக் திருட்டில் ஈடுபட்ட கோவை மாவட்டம் பாப்பநாயக்கன் பாளையத்தை சேர்ந்த திரஜித் (27), ஈரோடு பெரியவலசை சேர்ந்த சோமசுந்தரம்(32) ஆகியோரை கைது செய்து பைக்கை பறிமுதல் செய்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story