பறவை வேட்டை: ஒருவர் கைது!

பறவை வேட்டை: ஒருவர் கைது!

பறவை வேட்டை: ஒருவர் கைது

அதிரப்பட்டி பகுதியில் பறவை வேட்டையில் ஈடுப்பட்ட ஒருவர் கைது. மேலும் அவரிடம் நாட்டு துப்பாக்கி ஏர்கன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
விராலிமலை ஒன்றியம் அதிரப்பட்டி பகுதியில் சப்இன்ஸ்பெக்டர் ராஜா தலைமை யிலான போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டபோது புறா, கவுதாரி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து விராலிமலை தாலுகா மீன் வேலி, மேலஇன்பம்பட்டியை சேர்ந்த தமிழ்செல்வன்(32)என்பவரை கைது செய்து வேட்டைக்கு பயன்படுத்திய நாட்டு துப்பாக்கி ஏர்கன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story