பாஜக வேட்பாளர் அண்ணாமலையின் காலில் விழுந்து ஆசி பெற்ற புதுமண தம்பதி!

பாஜக வேட்பாளர் அண்ணாமலையின் காலில் விழுந்து ஆசி பெற்ற புதுமண தம்பதி!

அண்ணாமலை 

காலில் விழுந்து ஆசி பெற்ற புதுமண தம்பதியினரை பாஜக வேட்பாளர் அண்ணாமலை வாழ்த்தினார்.
கோவை நாடாளுமன்ற தேர்தலில் பாஜக வேட்பாளராக போட்டியிடும் அக்கட்சியின் மாநில தலைவர் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு தாக்கல் செய்ய உள்ளார். இந்நிலையில் பெரியகடை வீதியில் உள்ள கோனியம்மன் கோவிலில் சென்றவர் சாமி தரிசனம் செய்தார்.அப்போது அங்கு திருமணம் நடைபெற்ற புதுமண தம்பதிகளான கோவைப்புதூரை சேர்ந்த ரவி-தேவிகா தம்பதியினர் அண்ணாமலையின் காலில் விழுந்து ஆசி பெற்றனர்.பின்னர் 1989 ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்ட வீர கணேசன் தாயார் அழைத்துவரப்பட்டிருந்தார் அவரிடம் அண்ணாமலை ஆசி பெற்றார்.அண்ணாமலை கோவிலுக்கு வந்தபோது பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும் தெற்கு சட்டமன்ற உறுப்பினாருமான வானதி சீனிவாசன்,மாநில தேர்தல் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி,இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத்,கோவை மாவட்ட பாஜக தலைவர் ரமேஷ் உட்பட பாஜக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story