காங்கேயத்தில் நகர பாஜக சார்பில் ஆலோசனை கூட்டம்

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் தனியார் மகாலில் நகர பாஜக கட்சி சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. நாளை மறுநாள் பல்லடம் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் பிரதமர் மோடி கலந்துகொள்ளும் பொதுக்கூட்டத்திற்கு என்ன என்ன பணிகள் செய்வது குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்களின் என் மண் என் மக்கள் யாத்திரையின் நிறைவு விழாவிற்கு பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் செவ்வாய்க்கிழமை 27.2.2023 அன்று பல்லடம் வர இருப்பதால் காங்கேயம் நகர் பாஜக சார்பில் பொறுப்பாளர்கள் பூத் கமிட்டி நிர்வாகிகள் காங்கேயம் மணி மகாலில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் காங்கேயம் நகர பாஜக தலைவர் இரா. சிவப்பிரகாஷ் தலைமையில் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பொதுக்கூட்ட அரங்கில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை சிறப்பாக செய்தல் ,அதிகப்படிய பொதுமக்களை திரட்டுவது. மற்றும் பரதபிரதமர் நாட்டு மக்களுக்கு வழங்கிய நலத்திட்டங்களை பொதுமக்களிடையே எடுத்துக் கூறுவது. கூட்டத்தில் கலந்ந்து கொள்ளும் பொதுமக்களுக்கு இருக்கைகளை ஏற்படுத்தித்தருதல் மற்றும் குடிநீர் தேவைகளை நிறைவேற்றுதல் ஆகிய பணிகளை சிறப்பாக செய்வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இக்கூட்டத்தில் மாவட்ட துணைத்தலைவர் கோபாலகிருஷ்ணன்,உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு மாவட்ட தலைவர் சங்கரகோபால், சிவராஜ், பொதுச்செயலாளர் மணிகண்டன் ,பொருளாளர் சிவகுமார் ஆகியோர் உட்பட 50க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story