சுவர் விளம்பரம் எழுதுவதில் ஆர்வம் காட்டும் பா.ஜ.,வினர்

சுவர் விளம்பரம் எழுதுவதில் ஆர்வம் காட்டும் பா.ஜ.,வினர்

நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு குமாரபாளையத்தில் பா.ஜ.,வினர் சுவர் விளம்பரம் எழுதுவதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு குமாரபாளையத்தில் பா.ஜ.,வினர் சுவர் விளம்பரம் எழுதுவதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் பா.ஜ.க.வினர் சுவர் விளம்பரம் எழுதுவதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள். நாடாளுமன்ற தேர்தல் வருவதையொட்டி பல்வேறு அரசியல் கட்சியினர் தேர்தல் பணிகளை தீவிரமாக செய்து வருகிறார்கள். பூத் கமிட்டி அமைப்பது, வார்டுகளில் வீடு வீடாக தங்கள் கட்சி செய்த சாதனைகள் குறித்து துண்டு பிரசுரங்கள் கொடுத்து ஆதரவு கேட்பது, தெருமுனை கூட்டம் போட்டு பொதுமக்களை ஒன்று திரட்டி பேசுவது, நட்சத்திர பேச்சாளர்கள் வரவழைக்க ஆயத்தம் செய்வது, என்பது உள்ளிட்ட பல பணிகள் செய்து வருகிறார்கள். அனைத்து அரசியல் கட்சியினர் சுவர் விளம்பரம் செய்ய ஆயத்தமாகும் நிலையில் பா.ஜ.க.வினர் சுவர் விளம்பரம் செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story