பாஜக நிர்வாகிக்கு எதிராக போஸ்டர் ஒட்டிய பாஜகவினர்

பாஜக நிர்வாகிக்கு எதிராக போஸ்டர் ஒட்டிய பாஜகவினர்

போஸ்டர் 

மதுரையில் பாஜக பூத் ஏஜென்ட்டுகளுக்கு கொடுக்கப்பட்ட நிதியை கையாடல் செய்ததாக புகார் தெரிவித்து பாஜக தேர்தல் பணிக்குழு நிர்வாகிகளை கண்டித்து அக்கட்சியினரே ஒட்டியுள்ள போஸ்டர்கள் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மற்றும் திருமங்கலம் சட்டமன்றத் தொகுதியில் உள்ள பாஜக கட்சியின் நிர்வாகிகளான மதுரை மேற்கு மாவட்ட தலைவர் சசிகுமார், பாஜக விருதுநகர் பாராளுமன்ற தொகுதியின் அமைப்பாளராக நியமிக்கப்பட்ட வெற்றிவேல் மற்றும் மதுரை மேற்கு மாவட்ட செயலாளர் சின்னச்சாமி, செயற்குழு உறுப்பினர் சின்ன இருளப்பன் ஆகிய நான்கு பேர் விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் தேர்தல் பொறுப்பாளராக அக்கட்சி தலைமை சார்பில் நியமிக்கப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில் இவர்களது புகைப்படத்துடன் திருமங்கலம் மற்றும் திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிக்குட்பட்ட முக்கிய பகுதிகளான பேருந்து நிலையம், வணிக வளாகங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பாஜக நிர்வாகிகளே போஸ்டர்களை ஒட்டி உள்ளனர். அந்த போஸ்டரில் பூத் ஏஜெண்டுகளுக்கு கொடுக்கப்பட்ட நிதியில் ரூபாய்-40 லட்சம் வரை சுருட்டிய இந்த நால்வர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற வாசகத்துடன் அச்சிடப்பட்டுள்ளது. தொடர்ந்து., போஸ்டர் ஒட்டிய சில மணி நேரங்களிலேயே அதனை அனைத்தையும் கிழித்தெறிந்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Read MoreRead Less
Next Story