ஆத்தூர் அருகே இடையப்பட்டி கிராமத்தில் சாக்கடை கேட்டு சாலை மறியல் !

ஆத்தூர் அருகே இடையப்பட்டி கிராமத்தில் சாக்கடை கேட்டு சாலை மறியல் !

 சாலை மறியல்

ஆத்தூர் அருகே இடையப்பட்டி கிராமத்தில் ஆதிதிராவிடர் காலணியில் கழிவுநீர் தேங்கி நிற்பதால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாக சாக்கடை வசதி கேட்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே பெத்தநாயக்கன்பாளையம் இடையப்பட்டி கிராமத்தில் ஆதிதிராவிடர் காலனியில் கழிவு நீர் தேங்கி நிற்பதால் அப்பகுதியில் கொசுத்தொல்லை மற்றும் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் பலமுறை மனு அளித்தும் எந்த நடவடிக்கை எடுக்க வில்லை என கண்டித்து திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் தகவல் அறிந்து வந்த பெத்தநாயக்கன்பாளையம் வட்டாட்சியர் மாணிக்கம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதனை எடுத்து அனைவரும் கலைந்து சென்றனர் இதனால் அப்பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்ப்பட்டது.

Tags

Read MoreRead Less
Next Story