குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல்

குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல்

சாலை மறியல்

நத்தம் அருகே செந்துறை பாறைப்பட்டி பகுதியில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் புதிதாக கல் குவாரி அமைப்பதற்கு அரசு டெண்டர் விடுவதை தொடர்ந்து முன்னேற்பாடு பணிகளாக அப்பகுதியை மாவட்ட கனிமவளத்துறையினர் சென்று பார்வையிட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதையறிந்த அப்பகுதிகளான பாறைப்பட்டி, சரளைப் பட்டி, சீலமநாயக்கன்பட்டி, மாதவ நாயக்கன்பட்டி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த கிராம மக்கள் சுமார் 200 க்கும் மேற்பட்டோர் நேற்று சரளைபட்டி அருகே திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இப்பகுதியில் புதிதாக கல்குவாரிகளுக்கு டெண்டர் விடுவதால் விவசாயத்தில் உற்பத்தி பாதிப்பால் தொழில் நசிந்து விடும் என்று கூறினர்.

Tags

Next Story