அம்மாபட்டினத்தில் ரத்ததான முகாம்

அம்மாபட்டினத்தில் ரத்ததான முகாம்

ரத்த தான முகாம் 

தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் அம்மாபட்டினம் கிளை சார்பில் ரத்த தான முகாம் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் அம்மாபட்டினம் கிளை சார்பில் ரத்ததான முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. முகாமுக்கு மாவட்டத் துணைச் செயலர் சேக் அப்துல்லா தலைமை வகித்தார்.

கிளைத் தலைவர் சர்ஜுன், செயலர் ஃபைரோஸ் கான், பொருளாளர் ஆதில் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். முகாமில், 35 பேர் ரத்ததானம் வழங்கினர். அறந்தாங்கி அரசு மருத்துவமனையின் ரத்த வங்கி பொறுப்பு மருத்துவர் ராதாகிருஷ்ணன் தலைமையிலான மருத்துவக் குழுவினர் ரத்தத்தை பெற்றுக் கொண்டு, சான்றிதழ்களைவழங்கினர். முடிவில் மாவட்ட மருத்துவர் அணிச் செயலர் டாக்டர் சபியுல்லா நன்றி கூறினார்.

Tags

Next Story