உண்டியல் உடைத்து பணம் திருட்டு !

உண்டியல் உடைத்து பணம் திருட்டு !
காவல்
உளுந்துார்பேட்டை அருகே கோவில் உண்டியலை உடைத்து மர்ம நபர்கள் காணிக்கை திருடிச் சென்றது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
உளுந்துார்பேட்டை அருகே கோவில் உண்டியலை உடைத்து மர்ம நபர்கள் காணிக்கை திருடிச் சென்றது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். உளுந்துார்பேட்டை அடுத்த ஆதனுார் கிராமத்தில் அய்யனார் கோவில் உள்ளது. இக்கோவிலின் பூட்டு நேற்று முன்தினம் உடைக்கப்பட்டு கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது கோவிலுக்குள் இருந்த உண்டியலை உடைத்து, அதிலிருந்த காணிக்கையை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது. தகவல் அறிந்த உளுந்துார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story