வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு

வீட்டின் பூட்டை உடைத்து  நகை திருட்டு

பைல் படம் 

பொன்னமராவதி அருகே காட்டுப்பட்டியில் பூட்டியிருந்த வீட்டில் 14 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.70 ஆயிரம் ரொக்கம் திருடுபோனது குறித்து போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
காட்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பாஸ்கரன். இவர் புதன்கிழமை திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தனது மாமனார் இறப்பு நிகழ்விற்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிய நிலையில், அவரது வீட்டின் பின்புறக் கதவு உடைக்கப்பட்டு இருந்தது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்து உள்ளே சென்று பார்த்தபோது, வீட்டின் பீரோவில் இருந்த ரூ. 7 லட்சம் மதிப்பிலான 14 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ. 70 ஆயிரம் ரொக்கத்தை மர்மநபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. புகாரின்பேரில், பொன்னமராவதி போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து முதற்கட்ட விசாரணை மேற்கொண்டனர். தகவலறிந்த பொன்னமராவதி காவல் துணை கண்காணிப்பாளர் ஜூலியஸ் சீசர் சம்பவ இடத்தைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Tags

Read MoreRead Less
Next Story