விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து 10 சவரன் தங்க நகை கொள்ளை

சங்ககிரி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 10 சவரன் தங்க நகைகள், லேப்டாப், விலை உயர்ந்த செல்போன் ஆகியவற்றை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் திருடி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சங்ககிரியை அடுத்த வைகுந்தம், மேட்டுக்காடு பகுதியைச் சேர்ந்த விவசாயி சண்முகசுந்தரம். இவர் தனது மனைவியுடன் வீட்டின் மேல்மாடியில் தூங்க சென்றுள்ளார். இவரது பெற்றோர்கள் தற்போது கோடைகாலம் என்பதால் வீட்டை பூட்டிவிட்டு வீட்டிற்கு வெளியே படுத்து தூங்கி கொண்டிருந்துள்ளனர். இந்நிலையில் நேற்று அதிகாலை எழுந்திருந்த விவசாயி சண்முசுந்தரம் வீடு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த 10 சவரன் தங்க நகைகள், லேப்டாப் , விலை உயர்ந்த செல்போன் ஆகியவைகளை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது.

இது குறித்து விவசாய சண்முகசுந்தரம் சங்ககிரி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த சங்ககிரி போலீசார் விவசாயின் வீட்டில் கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சங்ககிரி அருகே பூட்டியிருந்தத விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து 10 சவரன் தங்க நகை லேப்டாப்,விலை உயர்ந்த செல்போன் ஆகியவைகளை மர்ம நபர்கள் திருடி சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags

Read MoreRead Less
Next Story