தொழிலதிபரின் உடல் புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரிக்குத் தானம்!

தொழிலதிபரின் உடல் புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரிக்குத் தானம்!

நாகப்பன் என்கிற சுந்தரம்

பொன்னமராவதியில் உடல் நல குறைவால் உயிரிழந்த தொழிலதிபரின் உடல் புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரிக்குத் தானமாக வழங்கப்பட்டது.
பொன்னமராவதி புதுப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் லெ.நா. நாகப்பன் என்கிற சுந்தரம் (77). புதுப்பட்டியில் கட்டடப் பொருள்கள் விற்பனை நிறுவனத்தை நடத்தி வந்த இவர் உடல் நலக்குறைவால் செவ்வாய்க்கிழமை காலமானார். இதையடுத்து இவரது உடலை மருத்துவக் கல்லூரி மாணவர்களின் ஆய்வுப் பயன்பாட்டிற்காக குடும்பத்தினர் தானமாக செவ்வாய்க்கிழமை மாலை வழங்கினர். முன்னதாக இறந்தவரின் உடலுக்கு திரளான பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

Tags

Read MoreRead Less
Next Story