கள்ளக்குறிச்சியில் பாஜக சார்பில் கருத்து கேட்பு

கள்ளக்குறிச்சியில் பாஜக சார்பில் கருத்து கேட்பு

கருத்து கேட்பு நிகழ்ச்சி

கள்ளகுறிச்சியில் பாஜக சார்பில் பொதுமக்களிடம் தேர்தல் வாக்குறுதிகள் தொடர்பான கருத்துகேட்பு கூட்டம் நடைப்பெற்றது.

கள்ளக்குறிச்சியில் பிரதமர் 'மோடி அரசின் உத்தரவாதம்' என்ற தலைப்பில் மக்களிடம் பா.ஜ.,வினர் கருத்து கேட்டனர். லோக்சபா தேர்தலை முன்னிட்டு கள்ளக்குறிச்சி மாவட்ட பா.ஜ., சார்பில் 'வளர்ச்சி அடைந்த பாரதம், மோடியின் உத்தரவாதம்' என்ற தலைப்பில் பொதுமக்களிடம் தேர்தல் வாக்குறுதி தொடர்பான கருத்துகள் பெறும் நிகழ்ச்சி நடந்தது.

கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் நடந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் அருள் தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர்கள் ஹரி, கிருஷ்ணவேணி, பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொதுச் செயலாளர் ராஜேஷ் வரவேற்றார். ஓ.பி.சி., அணி மாநில பொதுச் செயலாளர் ராஜ்குமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். இதில் பொதுமக்கள் பலர் தங்களது கோரிக்கைகளை எழுதி, அங்கிருந்த பெட்டியில் செலுத்தினர்.

நிகழ்ச்சியில் வர்த்தக பிரிவு மாவட்ட தலைவர் துரை, சிந்தனையாளர் பிரிவு மாவட்ட தலைவர் வில்சன், ஒன்றிய தலைவர் சக்திவேல், வேல்முருகன், ரகுநாத், பாண்டியன், ராமச்சந்திரன், நகர பொதுச் செயலாளர் அருண், பொருளாளர் உதயா உட்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். தொகுதி இணை அமைப்பாளர் மகேந்திரன் நன்றி கூறினார்.

Tags

Read MoreRead Less
Next Story