நாகை மாவட்டம் திட்டச்சேரி, திருமருகல் பகுதியில் அதிமுக சார்பில் பிரச்சார கூட்டம்

நாகை மாவட்டம் திட்டச்சேரி, திருமருகல் பகுதியில் அதிமுக சார்பில் பிரச்சார கூட்டம்

 பிரச்சார கூட்டம்

நாகை மாவட்டம் திட்டச்சேரி,திருமருகல் பகுதியில் அதிமுக சார்பில் பிரச்சார கூட்டம் நடைபெற்றது.
நாகை மாவட்டம் திட்டச்சேரி,திருமருகல் பகுதியில் அதிமுக சார்பில் பிரச்சார கூட்டம் நாகை மாவட்டம் திட்டச்சேரி பஸ் நிலையத்தில் அதிமுக சார்பில் பிரச்சார கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கட்சியின் அமைப்பு செயலாளர் ஆசைமணி தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் ராதாகிருட்டிணன்,பக்கிரிசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக திட்டச்சேரி நகர செயலாளர் அப்துல் பாசித் வரவேற்றார்.இதில் கழக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் கோபி காளிதாஸ்,கழக மகளிர் அணி துணைச் செயலாளர் தலைமைக் கழக பேச்சாளர் பாரிஸ் ராஜா ஆகியோர் நாகை நாடாளுமன்ற வேட்பாளர் சுர்ஜித்சங்கருக்கு ஆதரவாக இரட்டை இல்லை சின்னத்திற்கு வாக்கு சேகரித்து பேசினர்.இதில் மாவட்ட பிரதிநிதிகள் பெரியமணி,விநாயகசுந்தரம்,மாவட்ட இளைஞரணி தலைவர் ராம்சந்தர் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.அதேபோல் திருமருகல் சந்தப்பேட்டை கடை தெருவிலும் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது.

Tags

Read MoreRead Less
Next Story