புற்றுநோய் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி

புற்றுநோய் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி

புற்றுநோய் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி

தமிழ்நாடு விளையாட்டு வீரர்கள் சங்கம் சார்பில் புற்றுநோய் விழிப்புணர்வுக்காக நடத்தப்பட்ட மாரத்தான் போட்டியில் 1000 திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பு.
தமிழ்நாடு விளையாட்டு வீரர்கள் சங்கம் சார்பில் புற்றுநோய் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாரத்தான் போட்டி சென்னை பெசன்ட் நகர் ஆல்காட் பள்ளி அருகில் தொடங்கி நடத்தப்பட்டது. இதனை இந்திய இரும்பு மனிதர் கண்ணன், முன்னாள் ஐ ஜி சொக்கலிங்கம், தமிழக விளையாட்டு வீரர்கள் சங்கத்தின் நிறுவனரும் பொதுச் செயலருமான அய்யப்பன், உள்ளிட்டோர் தொடங்கி வைத்தனர். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பங்கேற்ற இந்த மாரத்தான் போட்டி 3 கிலோமீட்டர், 5 கிலோ மீட்டர் மற்றும் 10 கிலோ மீட்டர் என்ற வகைப்பாடுகளில் நடத்தப்பட்டது. இந்த மாரத்தான் போட்டியில் கிட்டத்தட்ட 1800 கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். மராத்தானில் கலந்து கொண்ட அனைவருக்கும் பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

Tags

Read MoreRead Less
Next Story