போலீசாரை தாக்கிய 19 பேர் மீது வழக்கு

போலீசாரை தாக்கிய 19 பேர் மீது வழக்கு

காவல்துறை விசாரணை


தியாகதுருகம் அடுத்த சித்தலுார் கிராமத்தில் போலீசாரை தாக்கிய 19 பேர் மீது வழக்கு.
கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அடுத்த சித்தலுார் கிராமத்தில் அங்காளம்மன் கோவில் திருவிழா கடந்த 17ம் தேதி நடந்தது. அப்போது இரவு 7:00 மணியளவில் சித்தலுாரைச் சேர்ந்த கந்தன் மகன் சுரேஷ் மற்றும் கொங்கராயபாளையத்தைச் சேர்ந்த அருணாசலம் மகன் லெனின்குமார் ஆகியோர் தகராறில் ஈடுபட்டனர். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த திட்டக்குடி இன்ஸ்பெக்டர் அருள்வடிவழகன் கலைந்து செல்லுமாறு தெரிவித்தும் கேட்காததால், சுரேஷ் மற்றும் லெனின்குமாரை போலீசார் வாகனத்தில் ஏற்றினர். அப்போது 10க்கும் மேற்பட்டோர் போலீசாரை வழிமறித்து திட்டி, பணி செய்ய விடாமல் தடுத்து தாக்கினர். இது குறித்து உளுந்துார்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் ராஜேஷ், 33; அளித்த புகாரின் சுந்தர்ராஜன் மகன் கோவிந்தன், பழனிவேல், ஏழுமலை, அஜித், சரவணன் உட்பட 19 பேர் மீது வரஞ்சரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story