சேலத்தில் தொழிலாளியை தாக்கிய 3 பேர் மீது வழக்கு !

சேலத்தில் தொழிலாளியை தாக்கிய 3 பேர் மீது வழக்கு !

போலீஸ்

சேலத்தில் தொழிலாளியை தாக்கிய 3 பேர் மீது வழக்கு பதிந்து தீவிரமாக தேடி வருகின்றனர்.
சேலம் கொண்டலாம்பட்டி அருகே உள்ள பெரியபுத்தூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 29). பெட்ரோல் பங்க் தொழிலாளி. இவருடைய மாமனாருக்கு சொந்தமான நிலத்தில் பைப்லைன் போடுவதற்காக குழி வெட்டியதாக கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட தகராறில் பழனிசாமியின் மாமியார் ஜோதி (45) என்பவரை காளியம்மன் குட்டை காட்டை சேர்ந்த சிவலிங்கம், ராஜமாணிக்கம், பொன்ராஜ் ஆகிய 3 பேரும் தாக்கினர். இதனை பழனிசாமி தட்டி கேட்டபோது அவரும் தாக்கப்பட்டார். இதில் காயம் அடைந்த பழனிசாமி சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றார். இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின்பேரில் கொண்டலாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவலிங்கம், ராஜமாணிக்கம், பொன்ராஜ் ஆகிய 3 பேரையும் தேடி வருகின்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story