கூம்பு வடிவ ஒலிபெருக்கியை பயன்படுத்தியவர் மீது வழக்கு பதிவு

கூம்பு வடிவ ஒலிபெருக்கியை பயன்படுத்தியவர் மீது வழக்கு பதிவு

பைல் படம் 

காரியாபட்டி அருகே அரசால் தடை செய்யப்பட்ட கூம்பு வடிவ ஒலிபெருக்கியை பயன்படுத்தியவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்,
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி காவல் நிலைய சார்பு ஆய்வாளர் அசோக்குமார் இவர் பணிக்கனேந்தல் கிராமத்தில் உள்ள விநாயகர் கோவில் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொழுது அங்கு தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கூம்பு வடிவ ஒலிபெருக்கியை பயன்படுத்தி பாடல்கள் ஒளிபரப்பப்பட்டது தெரிய வந்தது இதை அடுத்து பொதுமக்களின் அமைதிக்கும் தொல்லை கொடுத்த குற்றத்திற்காக கார்த்திக் என்பவர் மீது காரியாபட்டி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது

Tags

Next Story