வரும் 20ம் தேதி சிபிஎஸ்இ தேர்வு துவக்கம்

வரும் 20ம் தேதி சிபிஎஸ்இ தேர்வு துவக்கம்

சிவகங்கை மாவட்டத்தில் வரும் 20ம் தேதி 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கான சிபிஎஸ்இ தேர்வு துவங்குகிறது.

சிவகங்கை மாவட்டத்தில் வரும் 20ம் தேதி 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கான சிபிஎஸ்இ தேர்வு துவங்குகிறது.

மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் (சி.பி.எஸ்.இ.,) 10ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வு நேற்று தொடங்கிய நிலையில் சிவகங்கை மாவட்டத்தில் பிப்.20ல் 10ம் வகுப்புக்கும், பிளஸ் 2க்கு பிப்.22ம் தேதியும் துவங்குகிறது. மாவட்டத்தில் 10ம் வகுப்பில் 1026 மாணவர்களும், பிளஸ் 2 வில் 691 மாணவர்களும் தேர்வு எழுதுகின்றனர்.

இந்த தேர்வு மாவட்டத்தில் காரைக்குடி கேந்திரிய வித்யாலயா பள்ளி, செட்டிநாடு பப்ளிக் பள்ளி, செல்லப்பன் வித்யா மந்திர் பள்ளி, சிவகங்கை மான்போர்ட் பள்ளி உள்ளிட்ட 4 பள்ளிகளில் நடைபெறுகிறது.10ம் வகுப்பிற்கு மார்ச் 13ம் தேதியும் பிளஸ் 2க்கு ஏப்.2ம் தேதியும் தேர்வு முடிவடைகிறது.தேர்வு மையங்களுக்கு காலை 10:00 மணிக்கு முன்பே வர வேண்டும். தேர்வு காலை 10:30 மணிக்கு தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

Tags

Read MoreRead Less
Next Story