கத்தி முனையில் வாலிபரிடம் செல்போன் பறிப்பு

கத்தி முனையில் வாலிபரிடம் செல்போன் பறிப்பு

வழக்குப்பதிவு 

ஆத்தூர் அருகே கத்தி முனையில் வாலிபரிடம் செல்போன் பறித்த 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர். 
தூத்துக்குடி அருகே உள்ள முக்கானி குருவித்துறை கிராமத்தைச் சேர்ந்தவர் வெள்ளைச்சாமி மகன் மாரிமுத்து (49). இவர் நேற்று இரவு தூத்துக்குடி - திருச்செந்தூர் மெயின் ரோடு பழையகாயல் அருகே நடந்து சென்று கொண்டிருந்தபோது. மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு 2 மர்ம நபர்கள் கத்திய காட்டி மிரட்டி அவரிடம் இருந்து செல்போனை படித்து சென்று விட்டனர். இதன் மதிப்பு ரூபாய் 15,000 ஆகும். இது குறித்து ஆத்தூர் காவல் நிலையத்தில் மாரிமுத்து அளித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் பொறுப்பு சேக் அப்துல்காதர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags

Read MoreRead Less
Next Story