சென்னை- பூம்புகார் கடல் வழி பாதை : அதிமுக வேட்பாளர்

சென்னை- பூம்புகார்  கடல் வழி பாதை : அதிமுக வேட்பாளர்

அதிமுக வேட்பாளர் பாபு

மயிலாடுதுறை மாவட்டத்திற்கு மருத்துவக் கல்லூரி கொண்டு வரவும், சென்னையிலிருந்து நாகப்பட்டினம் வரை கடல் வழியாக ஒரு போக்குவரத்தினை உருவாக்கவும் பாராளுமன்றத்தில் குரல் கொடுப்பேன் என அதிமுக வேட்பாளர் பாபு வாக்குறுதியளித்தார்.
மயிலாடுதுறை பாராளுமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளராக பாபு அறிமுக கூட்டம் அதிமுக மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் தலைமையில் நடைபெற்றது. அப்போது பாராளுமன்ற வேட்பாளர் பாபு பேசுகையில், சீர்காழி சட்டை நாதர் சுவாமி கோயிலில் கண்டெடுக்கப்பட்ட ஐம்பொன் சிலைகள் தேவார பதிகம் தாங்கிய செப்பேடுகள் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தம் என பாராளுமன்றத்தில் முதல் கோரிக்கையாக அதனை வலியுறுத்தி பேசி, சட்டைநாதர் சுவாமி கோயிலில் சிலைகள் செப்பேடுகளை இருக்க குரல் கொடுப்பேன். மயிலாடுதுறை மாவட்டத்தில் ஆட்சியர் அலுவலகம் கட்டடம் கட்ட இடம் கொடுத்த ஆதினத்தின் அருளால் தான் தமிழக முழுவதும் மயிலாடுதுறை மாவட்டம் என பெருமைக்காக பேசப்படுகிறது. சென்னை நாகப்பட்டினம் வரை கடல் வழியாக ஒரு போக்குவரத்தினை உருவாக்க அமைய உள்ள மத்திய அரசிடம் கடுமையாக போராடி வலியுறுத்தி பெற்று தருவேன்.என்றார்.

Tags

Read MoreRead Less
Next Story