மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்: கனிமொழி எம்பி ஆய்வு!

மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்: கனிமொழி எம்பி ஆய்வு!

கனிமொழி எம்பி ஆய்வு

தூத்துக்குடி மாவட்டத்தில் "மக்களுடன் முதல்வர்" திட்ட முகாமை கனிமொழி எம்பி, அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தருமபுரி மாவட்டம், பாளையம் புதூர் ஊராட்சி, அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் இன்று (11.07.2024) நடைபெற்ற அரசு விழாவில் ஊரகப் பகுதிகளுக்கான "மக்களுடன் முதல்வர்" திட்டத்தை தொடங்கி வைத்ததை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டம் கயத்தார் ஊராட்சி ஒன்றியம் தெற்கு கழுகுமலை ஊராட்சி துலுக்கார்பட்டி ஆதிதிராவிடர் சமுதாய நலக்கூடத்தில் வைத்து தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் முன்னிலையில் திட்ட முகாம் மற்றும் துறை சார்ந்த பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை பதிவேற்றம் செய்யப்படுவதை பார்வையிட்டார். ஆய்வின் போது, மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பெ.ஜெகன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன், கூடுதல் ஆட்சியர் வளர்ச்சி இரா.ஐஸ்வர்ய ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story