தொடக்க பள்ளியில் ரூ.36 லட்சம் மதிப்பில் வகுப்பறைகள்

தொடக்க பள்ளியில் ரூ.36 லட்சம் மதிப்பில் வகுப்பறைகள்

பள்ளிக்கட்டிடம் திறப்பு 

நாகப்பட்டினம் நகராட்சிக்குட்பட்ட டாடா நகர் அரசு தொடக்கப்பள்ளியில் ரூ.36 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட மூன்று வகுப்பறைகள் திறக்கப்பட்டது.
நாகப்பட்டினம் மாவட்டம், நாகப்பட்டினம் நகராட்சிக்குட்பட்ட டாடா நகர் அரசு தொடக்கப்பள்ளியில் நாகப்பட்டினம் நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளும் பகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.36 இலட்சம் மதிப்பீட்டில் மூன்று வகுப்பறைகள் கொண்ட கட்டிடத்தினையும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானிடாம் வர்கீஸ், நாகை மாவட்ட திமுக செயலாளர் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகத் தலைவர் என் கௌதமன் நாகை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ் ஆகியோர் திறந்து வைத்தனர். இந்நிகழ்ச்சியில் நாகப்பட்டினம் நகரமன்ற தலைவர் த.இரா.மாரிமுத்து, மாவட்ட செயற்பொறியாளர் எஸ்.கே.கண்ணன், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story