ஈரோட்டில் மாநில அளவில் நடைபெற்ற கைப்பந்து பயிற்சி முகாம் நிறைவு விழா

ஈரோட்டில் மாநில அளவில் நடைபெற்ற கைப்பந்து பயிற்சி முகாம் நிறைவு விழா

மாணவர்களுக்கு பரிசு வழங்கல்

ஈரோட்டில் மாநில அளவில் நடைபெற்ற கைப்பந்து பயிற்சி முகாம் நிறைவு விழா நடைபெற்றது.

ஈரோடு எக்ஸலன்ஸ் அகாடமி மூலம் நடத்தப்பட்ட மாநில அளவிலான கைப்பந்து பயிற்சி முகாம் பெருந்துறை ஹிந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது. இம்முகாமிற்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் 40-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

கைப்பந்து பயிற்சி முகாம் நிறைவு மற்றும் 3ம் மாநில அளவில் கைப்பந்து போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நிகழ்வில் மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி. சரஸ்வதி கலந்து கொண்டு விழா பேருரை ஆற்றி வெற்றி பெற்ற மாணவருக்கு பரிசுகளை வழங்கினார்.

மேலும் பயிற்சி முகாமில் பங்கேற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி தமது பாராட்டுகளை தெரிவித்துக் கொண்டார்.

Tags

Next Story