அதிமுக வேட்பாளரை ஆதரித்து வாக்கு சேகரிப்பு!
வாக்கு சேகரிப்பு
ஆரணியில் அதிமுக வேட்பாளர் ஜி.வி.கஜேந்திரனை ஆதரித்து வாக்கு சேகரிக்கப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி ஒன்றியத்திற்குட்பட்ட பையூர் கிராமத்தில் பொது மக்களிடம் துண்டுப்பிரசுரங்கள் வழங்கி ஜி.வி.கஜேந்திரனுக்கு வாக்கு சேகரிக்கப்பட்டது. அப்போது முன்னாள் அமைச்சர் சேவூர் எஸ். ராமச்சந்திரன் எம்.எல்.ஏ., நகர மன்ற துணைத் தலைவர் பாரி.பி.பாபு, ஊராட்சி தலைவர் சரவணன்,முன்னாள் துணைத் தலைவர்கள் சங்கர், ரமேஷ், கிளை பொறுப்பாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.
Next Story