வந்தடைந்த முத்தமிழ் ஊர்தி - மலர் தூவி வரவேற்ற ஆட்சியர்!

வந்தடைந்த முத்தமிழ் ஊர்தி - மலர் தூவி வரவேற்ற ஆட்சியர்!

முத்தமிழ் ஊர்தியை வரவேற்ற ஆட்சியர்

முத்தமிழ்த்தேர் அலங்கார ஊர்தியினை மலர்தூவி வரவேற்ற ஆட்சியர்
கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையத்தில், கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் வரலாறுகளை இளம் தலைமுறையினர் அறிந்து கொள்ளும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ள ஊர்தி கிருஷ்ணகிரிக்கு வந்தடைந்தது. "முத்தமிழ்த்தேர் அலங்கார ஊர்தியினை மாவட்ட ஆட்சித்தலைவர் கே. எம். சரயு இ.ஆ.ப., அவர்கள், பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் தே. மதியழகன் ஆகியோர் மலர்தூவி வரவேற்று, ஊர்தியில் உள்ள கலைஞர் அவர்களின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பேனாக்களை வழங்கினார்கள். உடன், மாவட்ட ஊராட்சி தலைவர் மணிமேகலை நாகராஜ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு பார்வையிட்டனர்.

Tags

Next Story