பொதுமக்கள் அனைவரும் 100% வாக்களிக்க கலெக்டர் வேண்டுகோள் !

பொதுமக்கள் அனைவரும் 100% வாக்களிக்க கலெக்டர் வேண்டுகோள் !

பிருந்தா தேவி

சேலம் மாவட்டத்தில் மாவட்ட தேர்தல் அதிகாரி பிருந்தா தேவி 100% வாக்களிக்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 19ஆம் தேதி நடக்க உள்ளது. சேலம் மாவட்டத்தில் வாக்குப்பதிவிற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது. குறிப்பாக மாற்றுத்திறனாளிகள் எந்தவித சிரமமின்றி வாக்களிக்கும் வகையில் வாக்குச்சாவடிகளில் பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அத்துடன் வாக்காளர்களுக்கு தேவையான குடிநீர், சாமியான பந்தல் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன. எனவே சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்காளர்களும் 100% வாக்களித்து தங்களது ஜனநாயக கடமை ஆற்ற வேண்டுமென மாவட்ட தேர்தல் அலுவலரும் கலெக்டர்மான பிருந்தா தேவி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Tags

Next Story