காலை உணவு திட்ட உணவின் தரம் குறித்து ஆட்சியர் ஆய்வு

காலை உணவு திட்ட உணவின் தரம் குறித்து ஆட்சியர்  ஆய்வு

மாணவர்களுடன் கலந்துரையாடிய ஆட்சியர் 

மேல்வன்னியனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவ ,மாணவிகளிடம் காலை உணவு திட்டத்தில் வழங்கப்படும் உணவின் தரம் மற்றும் சுவை குறித்து மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் கேட்டறிந்தார்.
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் வட்டம், மேல்வன்னியனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் உங்களைத் தேடி, உங்கள் ஊரில் " திட்டத்தின் கீழ் நேற்று மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை ஆய்வு செய்தார் . அப்போது மாணவ ,மாணவிகளிடம் உணவின் தரம் மற்றும் சுவை குறித்து கேட்டறிந்தார்.

Tags

Next Story