கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை

கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை

College student

திருவட்டார் அருகே கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே வேர்க்கிளம்பி பகுதியை சேர்ந்தவர் சிம்சன். இவர் வெளிநாட்டில் வேலை செய்கி றார். இவரது மகன் தனியார் பாலிடெக் னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு பயின்று வந்தார்.

இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து உள்ளது. வீட்டில் தாயாரிடம் பணம் கேட்டு தகராறு செய்து உள்ளார். தாயார் பணம் தரமறுத்ததால் வீட்டில் இருந்து வெளியேசென்று வந்தவர் இரவு ரூமில் படுத்து தூங்கிள்ளார். காலையில் நீண்ட நேரம் ஆகியும் கதவு திறக்காததால் ஜன்னல் வழியாக பார்த்த போது தூக்கில் தொங்கிய நிலையில் காணப் பட்டார்.

அவரை அப்பகுதியினர் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் சிஜோ ஏற்கனவே இறந்ததாக தெரிவித்தார்.இதுகுறித்து அவரது தாயார் ஜெயந்திராணி திருவட்டார் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து, பிரேத பரிசோதனைக்கு பின் உடலை உற வினர்களிடம் ஒப்படைத்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story