சட்டவிரோதமாக மணல் அள்ளிய மாட்டு வண்டிகள் பறிமுதல்!

சட்டவிரோதமாக மணல் அள்ளிய மாட்டு வண்டிகள் பறிமுதல்!

மாட்டு வண்டிகள் பறிமுதல்

மணல் திருட்டில் ஈடுபட்டவரிடம் மாட்டு வண்டியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கறம்பக்குடி அக்னி ஆற்றில் சட்ட விரோதமாக ஆற்று மணல் திருடிச் செல்வதாக கறம்பக்குடி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு தாலுகா நெய்வேலி வடபாதியை சேர்ந்த தமிழ்வாணன் கால் யூனிட் மணல் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.அவரிடமிருந்து மாட்டு வண்டியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Tags

Next Story