ஆவணமின்றி எடுத்து வரப்பட்ட ஐசிஐசிஐ வங்கி ஏடிஎம் பணம் பறிமுதல்

ஆவணமின்றி எடுத்து வரப்பட்ட  ஐசிஐசிஐ  வங்கி ஏடிஎம் பணம் பறிமுதல்

பறிமுதல் செய்யப்பட்ட பணம் 

தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையின் போது ஐசிஐசிஐ வங்கி ஏடிஎம் வாகனத்தில் உரிய ஆவணம் இன்றி கொண்டுவரப்பட்ட ரூ.8 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் தென்காசி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் தேர்தல் விதிமுறை நடைமுறைக்கு வந்ததை அடுத்து தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர் பறக்கும் படை அதிகாரிகள் இராஜபாளையம் மதுரை சாலையில் தனியார் பெட்ரோல் பங்க் அருகே வாகன சோதனையில் ஈடுபட்ட பொழுது ஐசிஐசிஐ வங்கிக்கு சொந்தமான ஏடிஎம் பணம் வாகனத்தில் சோதனை செய்த பொழுது உரிய ஆவணம் இல்லாமல் 8 லட்ச ரூபாய் இருந்தது அதை கைப்பற்றி சோதனை செய்த பொழுது ஏடிஎம்மில் பணம் அனுப்பக்கூடிய வாகனத்தின் பதிவு எண் மாறி இருந்துள்ளது.

இதற்கு ஆவணங்கள் சரியில்லை என கூறி தேர்தல் பறக்கும் படை அதிகாரி மாரியப்பன், சிறப்பு சார்பு ஆய்வாளர் ராஜ்குமார், தலைமை காவலர் விஜய் கண்ணன், முதல் நிலை காவலர்கள் ரவிக்குமார். முனியம்மாள், அடங்கிய தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் 8 லட்சம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்து இராஜபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் ஜெய பாண்டியிடம் ஒப்படைத்தனர்

Tags

Read MoreRead Less
Next Story