தடை செய்யபட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் !

தடை செய்யபட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் !

புகையிலை

நத்தம் அருகே சமுத்திரப்பட்டியில் பேக்கரி குடோனில் பதிக்கி வைக்கப்பட்டிருந்த 376 கிலோ தடை செய்யபட்ட புகையிலை பொருள்களை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
திண்டுக்கல் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் கலைவாணி உத்தரவின் பேரில் நத்தம் அருகே சமுத்திராபட்டி- சிறுகுடி சாலையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் செல்வம், கண்ணன், முருகன் ஆகியோர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சமுத்திராபட்டி ஊரணிக்கரை பகுதியில் உள்ள பேக்கரி குடோனில் விற்பனைக்காக புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கபட்டது. இதையடுத்து குடோனில் இருந்த 376 கிலோ புகையிலையை பறிமுதல் செய்த உணவு பாதுகாப்பு அலுவலர்கள் அதை நத்தம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருட்களின் மதிப்பு ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் ஆகும்.

Tags

Read MoreRead Less
Next Story