திருமங்கலத்தில் வாக்களித்த காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி

திருமங்கலம் ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளி வாக்குச்சாவடியில் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி தனது வாக்கை பதிவு செய்தார்.

கரூர் நாடாளுமன்ற உறுப்பினராக செயல்பட்டு வருபவர் ஜோதிமணி. நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் தான் சார்ந்துள்ள காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடுகிறார். இன்று அவரது சொந்த ஊரான கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தாலுகா பெரிய திருமங்கலம் ஊராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு மையத்திற்கு தனது வாக்கை செலுத்த வந்தார்.

அதிகாரிகள் அவரது வாக்கு இருப்பதை உறுதி செய்து ஆவணங்களை சரிபார்த்த பிறகு இடது கை ஆள்காட்டி விரலில் மை தடவி பின்னர் வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்கை செலுத்த அனுமதித்தனர். அங்கு தனது வாக்கை பதிவு செய்த ஜோதிமணி வாக்குப்பதிவு செய்ததற்கான அடையாளத்தை தனது இடது கை ஆட்காட்டி விரலை உயர்த்தி செய்தியாளர்களுக்கு காட்டினார். இதன்பிறகு வாக்கு மையத்தை விட்டு வெளியேறிய அவர், நாடாளுமன்ற தொகுதியில் வாக்குப்பதிவு நடைபெறுவதை நேரில் பார்வையிட புறப்பட்டு சென்றார்.

Tags

Read MoreRead Less
Next Story