காங்கிரஸ் வேட்பாளர் ஓட்டு சேகரிப்பு!

காங்கிரஸ் வேட்பாளர் ஓட்டு சேகரிப்பு!

கார்த்தி சிதம்பரம்

சிவகங்கை மக்களவைத்தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரத்தை ஆதரித்து பொன்னமராவதி பேருந்து நிலையம் எதிரே பொதுமக்களிடம் வாக்குகள் சேகரித்தார்.
பாஜக மீண்டும் வென்று ஆட்சிக்கு வந்தால் நாட்டில் இனி தேர்தலே இருக்காது என்றார் நடிகர் வாகை சந்திரசேகர். சிவகங்கை மக்களவைத்தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரத்தை ஆதரித்து பொன்னமராவதி பேருந்து நிலையம் எதிரே பொதுமக்களிடம் வாக்குகள் சேகரித்து அவர் பேசியதாவது: எங்களை விடவும் மோடி தான் சிறந்த நடிகர். இந்தத் தேர்தலில் தப்பித்தவறி பாஜக ஆட்சிக்கு வந்தால் இனிமேல் தேர்தலே கிடையாது. சர்வாதிகார ஆட்சிதான் நடக்கும். இதைத் தவிர்க்க இந்தியா கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரியுங்கள் என்றார். தொடர்ந்து அமைச்சர் எஸ். ரகுபதி பேசியது: திமுகவின் தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.அரசின் நலத்திட்டங்கள் தொடர இந்தியா கூட்டணி வேட்பாளருக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள் என்றார். தொடர்ந்து வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் பேசுகையில், பாஜக ஆட்சியின் குறைகளை களைய காங்கிரஸ் கட்சிக்கு வாக்களியுங்கள் என்றார். முன்னதாக, காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் பொன்னமராவதி ஒன்றியத்தில் 45 இடங்களில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டமுன்னாள் எம்எல்ஏ ராம.சுப்புராம், காங்கிரஸ் வட்டாரத் தலைவர்கள் வி. கிரிதரன், குமார், திமுக ஒன்றியச்செயலர் அ.அடைக்கலமணி மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story